முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணம் வாழ்த்து மடல்

                      திருமணம் வாழ்த்து மடல்                                                                                   வாழையடி வாழையாக வாழ்ந்திருக்கும் பந்தம்
வாழ்வாங்கு வாழவேனும் நல்லா வாழ்த்தவேணும் சொந்தம்
வாய்திறந்து வாழ்த்துப்பாடி வாசமலர் தூவ வந்தோம்
வந்திருக்கும் வீரசைவர்களெல்லாம் நல்லாசிகளை தந்தோம்...

பண்டாரத்தார் அனைவரும் பல்லாண்டு வாழ்த்து சொல்லனும்
லிங்காயத்தார் அனைவரும் அத்தங்கங்களை வாழ்த்தனும்
ஜங்கமர்கள் அனைவரும் ஓங்கார புகழ் பாடனும்
வீரசைவர் அனைவரும் மணமக்களுக்கு வீரசைவ பண்புகளை சொல்லனும்...

தேசிகர்கள் அனைவரும் திருவாசகங்களை சொல்லனும்
குருக்கள் அனைவரும் திருமந்திரங்களை படிக்கனும்
புலவர்கள் அனைவரும் பல கவிதைகளை பாடனும்
பூசாரிகள் அனைவரும் புனித திருநீற்றை வழங்கனும்...

தம்பிரான்கள் அனைவரும் இளந்தம்பதிகளை வாழ்த்தனும்
கோவம்சத்தார் அனைவரும் கோடிமலர் தூவனும்
சிவாச்சாரியார் அனைவரும் சிவகானம் பொழியனும்
யோகிஸ்வரர் அனைவரும் யாசகங்கள் செய்யனும்...

அய்யாமார்கள் அனைவரும் அருள்வாக்கு கொடுக்கனும்
அய்யர்மார்கள் அனைவரும் அர்ச்சதைகள் தூவனும்
ஆண்டிபண்டாரத்தார் அனைவரும் முருகனை வேண்டி பாடனும்
கன்னடியர் அனைவரும் திருபன்னிசை பாடனும்...

மணியக்காரர் அனைவரும் மனசார வாழ்த்தனும்
மூர்த்திகள் அனைவரும் பல கீர்த்திகளை தந்திடனும்
ஜோகிகள் அனைவரும் இந்த ஜோடிகளை வாழ்த்தனும்
உவச்சர்கள் அனைவரும் உளமார வாழ்த்தனும்...

வைராவிகள் அனைவரும் வந்திருந்து வாழ்த்தனும்
வைராகிகள் அனைவரும் வரவேற்பு தந்து சிறப்பிக்கனும்
ஓதுவார்கள் அனைவரும் நல் வேதங்களை படிக்கனும்
பொதுமக்கள் அனைவரும் நம்ம கூட்டம் கண்டு திகைக்கனும்...

எங்க சொக்கநாதர் குலத்தில் வந்த திருநிறைசெல்வன் ஹரிஹரனுக்கும்
எங்க சொக்கதங்கம் மீனாட்சியாய் திருநிறைசெல்வி மோனிசாவுக்கும்
தங்க பல்லாக்கில் அமரவைத்து தேவாதி தேவர்களை அழைத்து வைத்து
வாங்க அனைவரும் வாங்க வாழ்த்து சொல்லி திருக்கல்யாணம் நடத்துவோம்...

வந்தவர்க்கு வயிறார விருந்து படைத்து
வாழ்த்தியவர்க்கு புன்னகையை பரிசா கொடுத்து
அந்த புன்னகையோடு என்றும் வாழ்க்கையில் சிறப்பு பெற்று
நம் குலம் விளங்க வீரசைவனை ஈன்றெடுத்து
நம் குலம் பெறுக பண்டாரத்தியை பெற்றெடுத்து
பதினாறுவகை செல்வங்களை பெற்று
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
மணமக்கள் வாழ்க பலகோடி நூறாயிரம் ஆண்டு...

தில்லையம்பலம்

இப்படிக்கு
உங்கள் சொந்தம்
க.தனசேகரன்
இராமநாதபுரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.
சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர். சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது. தமிழக வீரசைவம் குல பிரிவுகள். 1.ஆண்டிபண்டாரம் 2.அய்யர் 3.ஐயா 4.தேசிகர் 5.குருக்கள் 6.ஜங்கம் 7.ஜோஹி 8.கன்னடியர் 9. லிங்காயத் 10.மூர்த்தி 11.ஓதுவர் 12.பண்டாரம் 13.பூசாரி 14.புலவர் 15.சிவாச்சார்யா 16.தம்பிரார் 17.வீரசைவர் 18.யோகீஸ்வரர் மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ...

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...