வீரசைவபண்டாரத்தார் வலைதளம்இந்தியாவின் பழமையான சிந்து சமவெளி நாகரீக (ஹராப்பா & மொகஞ்சதாரோ) காலத்திலே வீரசைவம் உண்டு என்பது வீரசைவ ஆய்வாளர் இரத்தின சபாபதி குறிப்பிடுகிறார். இந்த ஹராப்பா நாகரீக பகுதிகளில் பசுபதி (வீரசைவம்) வழிபாடு சிறப்பாக இருந்துவந்தற்க்கு ஆதரமாக பல பசுபதி முத்திரைகள் தொல்பொருள் ஆய்வுகளால் கண்டறிப்பட்டுள்ளது. இன்றும் சிந்துச்சமவெளி நாகரீகம் சிறப்புற்றிருந்த பகுதிகளில் ஒன்றான குருசேத்திரத்த சுற்றியுள்ள பகுதிகளில் வீரசைவர்களான ஜங்கமர்களே பெரும்பாண்மையாக உள்ளனர். மேலும் இந்தப் பகுதிகளில் உள்ள தானேஷ்வரர் ஆலயமே பசுபதி வழிபாட்டின் மையமாகவும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும் திருமந்திரம் நூலை நந்தி நெறி அல்லது வீரசைவ நெறி நூல் என்பது ஆய்வாளர் பலரின் பொதுவான கருத்து ஆகும். திருமந்திரமே தமிழகத்தின் முதல் சைவ நூலாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நூலில் வீர ஆகமம் மற்றும் வாதுள ஆகமம் போன்ற வீரசைவ ஆகமங்களை குறிப்பிடப்படுவதால் தமிழகத்தில் வீரசைவம் என்பது திருமுலர் காலத்திற்க்கும் முன்னர் இங்குள்ளது என்பதை அறியமுடிகிறது.
தனித்தமிழ் இயக்கத்தை சார்ந்த மறைமலையடிகள் வீரசைவமும் சைவ சித்தாந்தமும் சுந்தரர் காலத்திலே கலக்க ஆரம்பித்தது என்றும், மாணிக்கவாசகர் வீரசைவத்தை சார்ந்தவர் என்பதால், நான்காம் சைவக் குரவராக பிறக்காலத்தில் இணைக்கப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறார். மேலும் மாணிக்கவாசகர் மூவர் முதலிகளையும் காலத்தால் முந்தியவர் என்பது ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதன்மூலம் வீரசைவம் என்பது இந்திய வரலாற்றிலும் தமிழ வரலாற்றிலும் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவானதாக கருதப்படும் திருமந்திரம் நூலை நந்தி நெறி அல்லது வீரசைவ நெறி நூல் என்பது ஆய்வாளர் பலரின் பொதுவான கருத்து ஆகும். திருமந்திரமே தமிழகத்தின் முதல் சைவ நூலாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நூலில் வீர ஆகமம் மற்றும் வாதுள ஆகமம் போன்ற வீரசைவ ஆகமங்களை குறிப்பிடப்படுவதால் தமிழகத்தில் வீரசைவம் என்பது திருமுலர் காலத்திற்க்கும் முன்னர் இங்குள்ளது என்பதை அறியமுடிகிறது.
தனித்தமிழ் இயக்கத்தை சார்ந்த மறைமலையடிகள் வீரசைவமும் சைவ சித்தாந்தமும் சுந்தரர் காலத்திலே கலக்க ஆரம்பித்தது என்றும், மாணிக்கவாசகர் வீரசைவத்தை சார்ந்தவர் என்பதால், நான்காம் சைவக் குரவராக பிறக்காலத்தில் இணைக்கப்பட்டார் என்றும் குறிப்பிடுகிறார். மேலும் மாணிக்கவாசகர் மூவர் முதலிகளையும் காலத்தால் முந்தியவர் என்பது ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுவதையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இதன்மூலம் வீரசைவம் என்பது இந்திய வரலாற்றிலும் தமிழ வரலாற்றிலும் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக